Monday, September 20, 2010

நடிகர் கமல்ஹாசன் 1954ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் ஸ்ரீனிவாசன். தாயார் பெயர் ராஜலட்சுமி. இவரது தந்தையார் ஒரு வழக்குரைஞர். கமல்ஹாசனின் அவருக்கு மூன்றவது மகன் ஆவார். சாருஹாசன், சந்திரஹாசன் ஆகியோர்கமல்ஹாசனின் மூத்த சகோதரர்கள்.

கமல்ஹாசன் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். கமல்ஹாசன் தனது சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்து அதற்காக விருதும் பெற்றார்.
அது முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உலக நாயகனாக உருவெடுத்துள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை முதலில் மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்று, இந்தி நடிகை சரிகாவை மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் - ஸ்ருதி, அக்ஷரா.
 கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நாயகன், மூன்றாம் பிறை மற்றும் இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை பெற்றுள்ளார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தனது முதல் படமான 'களத்தூர் கண்ணாமா' படத்திற்காக பெற்றுள்ளார்.

1983 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் ஆசிய திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை முறையே 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' ஆகிய படங்களுக்காக பெற்றுள்ளார். கமல்ஹாசன் நடித்த 6 படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ளன.
கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை 18 முறை வென்றுள்ளார்.1990 ஆம் ஆண்டு இந்திய அரசு கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலை கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.

கமல்ஹாசன் இயக்கிய படங்கள்

விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
கமல்ஹாசன் தயாரித்த படங்கள்

மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
விருமாண்டி (2004)
ஹே ராம் (2000)
கமல்ஹாசன் திரைக்கதை எழுதிய படங்கள்

மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ராம்ஜி லண்டன்வாலா (2005)
அன்பே சிவம் (2003)
நள தமயந்தி (2003)
ஆளவந்தான் (2001)
ஹே ராம் (2000)
சாச்சி 420 (1997)
விராசத் (1997)

Thursday, September 16, 2010

கிளிபேச்சு..

எனக்கு தெரிந்து
எல்லா கிளிகளுமே
சொன்னால் சொன்னதையே
திரும்ப சொல்லும்..
நீ மட்டும்தான் சொன்னால் திரும்ப
'சீ..போடா' என்கிறாய்.
.....................................................
அன்புடன்..
கார்த்திக்.